மெல்லத் தமிழினி சாகுமோ?தொடங்குங்கள் உங்கள் யுத்தத்தை.
தமிழும் நானும்: சமீபத்தில் துபாய் தமிழ் சங்கத்தில் நடந்த பொங்கல் சிறப்பு விழாவில்,தமிழில் எழுதப் படிக்க இலவசமாக வகுப்புக்கள் எடுப்பதைப் பாராட்டி மலர்க்கொத்துக் கொடுத்து கொளரவித்தார்கள்.முதலில் வரவேற்பு உரையில் செயலாளர் திரு ஜெகன்னாதன் அவர்களும், நிகழ்ச்சியின் இறுதியில் உயர் திரு.தாஹா அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசியது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது மட்டுமல்லாமல் இந்த ஊரில்(துபாய்) வந்து ஒரு தமிழராக இருந்து பல பேருக்கு வேலை கொடுக்கும் ஒரு பெரிய முன்னணித் தொழிலதிபராகவும், அனைத்துத் தமிழ் மக்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கும் மதிப்பிற்குரிய உயர்.திரு .ஐயா சையது சலாவுதீன் (ETA-Managing Director)அவர்களின் கையினால் மலர்க்கொத்தினைப் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்று தமிழில் இலவசமாக வகுப்புக்கள் எடுக்க நான்ஆரம்பித்தது திடீரென்று ஒரு நாளில் தொடங்கப் பட்டதில்லை.வெகு நாட்களாக என் மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு ஆதங்கமே ஆகும். பொதுவாக என் மனதில் தோன்றிய ஒரு சில கேள்விகளின் வெளிப்பாடே ஆகும். அக்கேள்விகளை நீங்களும் சிந்திப்பீர்களாயின் தமிழ் என்றென்றும் அழியாது.