எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்?
எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் ? வெகு நாட்களாக நான் எழுதாமல் இருந்தேன்,ஆனால் என் எழுத்தையும் விரும்பிப் படிக்கும் சிலர் மற்றும் பலர்.....??? (என்ன கொடுமை சார் இது??) விரும்பிக் கேட்ட காரணத்தால் இன்று இந்த கட்டுரையை எழுதலாமென நினைத்தேன். எதைப் பற்றி எழுதலாமென எண்ணும் போது என் கண்ணில் பட்டது தான் இந்தப் புரட்சித் திருமணம்...(கடவுளே...இது ஏன் என் கண்ணில் பட்டதோ????)முக நூலில் பரிமாறியிருக்கும் அன்பரின் கலைச் சேவை தொடரட்டும்......என்ன ஒரு பண்பாடு...ஆஹா அருமையோ அருமை.... திருமண நாளன்று மணப்பெண் ஆடிக் கொண்டே மண மேடைக்கு வருவாராம்...உடன் தோழியர் மட்டுமின்றி அம்மையாரின் தந்தை மற்றும் சில ஆண் நண்பர்களோ,உறவினர்களோ அல்லது சகோதரர்களோ...அவர்கள் யாரோ..ஆனால் பார்க்கும் போது மணப்பெண் ஒரு சில ஆண்களுடன் இணைந்து ஆடுவது போலத் தானே தோன்றுவது..அதுவும் திருமணத்தன்றே ஆடி இருப்பது தான் வேடிக்கை....... இவர்கள் ஏனிப்படி நடந்து கொள்கிறார்கள்?திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு..அதை ஏன் கேலிக்கூத்தாக மாற்ற வேண்டும்? வேண்டுமென்றால் அதற்கென்று இருக்கும் இரவு நேர ஆட்ட விடுதிகள